ஐபிஎல் 2023 தொடரில் ஏற்பட உள்ள புதிய மாற்றங்கள் குறித்து ஒரு பார்வை..!! | ipl 2023 new format and rules
உலகின் முக்கிய டி20 தொடர்களில் முக்கிய தொடராக விளங்கும் இந்தியாவின் ஐபிஎல் தொடருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிக விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில், இந்த தொடரில் அறிமுகமாக உள்ள அதிரடி மாற்றங்கள் மற்றும் புதிய விதிகள் குறித்த தகவல்களை காண்போம்.
இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடராக விளங்கும் ஐபிஎல் தொடர் நடப்பு ஆண்டில் புதிய அசத்தல் விதிமுறைகளுடன் முந்தைய தொடர்களில் இருந்து சற்று மாறுபட்டதாக ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைய உள்ளது. மேலும் இந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 3 ஆண்டுகள் கழித்து அனைத்து அணிகளும் தங்களின் ஹாம் கிரவுண்டில் விளையாட உள்ளார்கள் என்பதால் தொடரின் மீதான ஆர்வம் மிகவும் அதிகரித்துள்ளது.
ஐபிஎல் 2023 தொடரில் மொத்தம் 10 அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், தொடரில் 2 பிரிவுகளாக அணிகள் பிரிந்து போட்டிகளில் பங்கேற்க உள்ளார்கள். அதாவது 10 அணிகளும் பிரிந்து குரூப் ஏ பிரிவில் 5 அணிகள் மற்றும் குரூப் பி பிரிவில் 5 அணிகள் என இரண்டு பிரிவுகளாக இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் ஏ பிரிவு :
மும்பை இந்தியன்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
டெல்லி கேப்பிடல்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
குரூப் பி பிரிவு :
சென்னை சூப்பர் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
குஜராத் டைட்டன்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் முறை :
ஐபில் 2023 ஆம் தொடரில் அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுகாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த 2023 ஆம் ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள 10 அணிகளும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளார்கள், இதில் புதிய முறையில் ஒரு அணி 7 போட்டிகளில் தங்கள் ஹாம் கிரௌண்டிலும் மீதம் உள்ள 7 போட்டிகளில் மற்ற அணியின் ஹோம் கிரௌண்டிலும் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அணி |
மைதானம் (ஹோம் கிரவுண்ட் ) |
சென்னை சூப்பர் கிங்ஸ் |
எம்.ஏ.சிதம்பரம் மைதானம் |
மும்பை இந்தியன்ஸ் |
வான்கடே மைதானம் |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
ஈடன் கார்டன் மைதானம் |
டெல்லி கேபிடல்ஸ் |
அருண் ஜெட்லி மைதானம் |
பஞ்சாப் கிங்ஸ் |
பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம் |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
எம். சின்னசாமி மைதானம் |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம் |
ராஜஸ்தான் ராயல்ஸ் |
சவாய் மான்சிங் மைதானம் |
குஜராத் டைட்டன்ஸ் |
நரேந்திர மோடி மைதானம் |
லக்னோ சூப்பர் ஜாயின்ட்ஸ் |
பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானம் |
நோ-பால் மற்றும் வைடு பால் ரிவியூ :
ஐபிஎல் தொடரில் முதல் முறையாக நடுவர் அளிக்கும் நோ-பால் மற்றும் வைடு பால் முடிவை மறுபரிசீலனை செய்யும் ( ரிவியூ) முறை மற்றும் அறிமுகமாக உள்ளது. இதன்மூலம் போட்டியின் முக்கிய தருணங்களில் நடுவர் அளிக்கும் முடிவால் ஏற்படும் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த ரிவியூ முறை முதல் முதலாக மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அறிமுகமான நிலையில் , தற்போது ஆடவர் பிரீமியர் லீக் தொடரிலும் அமல்ப்படுத்த பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இந்நிலையில் நடுவர்கள் முடிவின் மீது அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இருக்கும் ஐயம் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்பாக்ட் பிளேயர் முறை:
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் முதல் முறையாக இம்பாக்ட் பிளேயர் என்ற புதிய முறை நடைமுறைக்கு வர உள்ளது. அதாவது ஒரு போட்டியின் நடுவில் களத்தில் இருக்கும் ஒரு பிளேயருக்கு பதில் வேறு ஒரு புதிய பிளேயரை போட்டியில் விளையாட அனுமதிக்கலாம், அந்த பிளேயர் தான் இம்பாக்ட் பிளேயர் என்று அழைக்கப்படுவார். இந்த பிளேயர் போட்டியின் போக்கையே மற்றும் தன்மை உடையவராக அமையலாம் என்பதால், அவரை இம்பாக்ட் பிளேயர் என்று கூறுகிறார்கள்.
இம்பாக்ட் பிளேயர் முறையில் முக்கிய விதி, ஒரு அணியில் 11 பிளேயர்களில் 4 வெளிநாட்டு பிளேயர்கள் இடம்பெற்றிருந்தால் இம்பாக்ட் பிளேயராக இந்திய வீரர் தான் நியமிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். அப்படி இல்லாத நிலையில் வெளிநாட்டு வீரர் இம்பாக்ட் பிளேயர் இடத்தில் களமிறங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 ஆம் தொடரின் போட்டிகள் வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் ஆரம்பமாகி மே 28 வரை நடைபெற உள்ளது, மேலும் தொடரில் இடம்பெற்றுள்ள 10 அணிகளும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முழுவீச்சில் செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையில் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.