தனது ஓய்வுக்கான காலம் வெகுதொலைவில் இல்லை என்று கருதுவதாக அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி கூறியுள்ளார். கத்தாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்த லயோனல் மெஸ்சி கடந்த ஜூன் மாதம் பிரான்சின் பி.எஸ்.ஜி. கிளப்பில் இருந்து விலகி அமெரிக்காவை சேர்ந்த இண்டர் மியாமி கிளப்பில் இணைந்தார். மேஜர் லீக் போட்டியில் வருகிற 21-ந் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இண்டர் மியாமி அணிக்காக களம் இறங்க அமெரிக்கா சென்றுள்ள 36 வயது மெஸ்சி அர்ஜென்டினா டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், எனது வயதை கணக்கில் கொண்டால் இன்னும் எத்தனை நாட்கள் அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாட முடியும் என்பது தெரியவில்லை. எனது ஓய்வுக்கான காலம் வெகுதொலைவில் இல்லை என்று கருதுகிறேன். எனது ஓய்வுக்கான தருணம் எப்போது வரும் என்பது துல்லியமாக தெரியவில்லை. எல்லாவற்றையும் சாதித்து விட்ட நான் தற்போது ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன்' என்றார்...
கர்நாடகாவின் பெங்களூரு நகரில், எஸ்.ஏ.எப்.எப். சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன . இதில், கடந்த ஒன்றாம் தேதி நடந்த போட்டி ஒன்றில் லெபனான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் விளையாடின. இந்த போட்டியில், போட்டி நேரத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் வெற்றி பெறவில்லை. எனினும், பெனால்டி முறையில் இந்திய அணி அனைத்து வாய்ப்புகளையும் கோல்களாக மாற்றியது. இந்திய அணி பெனால்டியில் 4-2 என்ற புள்ளி கணக்கில் லெபனானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்தியாவும், குவைத் அணியும் இறுதிப் போட்டியில் விளையாடின. ...
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் லெபனான் அணியை வீழ்த்தி இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கர்நாடகாவின் பெங்களூரு நகரில், எஸ்.ஏ.எப்.எப். சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், நேற்று நடந்த போட்டி ஒன்றில் லெபனான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் விளையாடின. இந்த போட்டியில், போட்டி நேரத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் வெற்றி பெறவில்லை. எனினும், பெனால்டி முறையில் இந்திய அணி அனைத்து வாய்ப்புகளையும் கோல்களாக மாற்றியது....
சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரர்களில் முதன்மையானவராக விளங்கும் போர்ச்சுகல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் வீரராக முக்கிய உலகசாதனை படைத்து அசத்தியுள்ளார்....
கிழக்கு பெங்கால் அணியின் சிறந்த முன்கள வீரர்களில் ஒருவரான பரிமல் டே நேற்று காலமானார். அவருக்கு வயது 81. ...
கால்பந்து விளையாட்டின் ஆல் டைம் சிறந்த வீரர்களில் ஒருவரான பிரேசில் ஜாம்பவான் பீலே தனது 82வது வயதில் காலமானார். அவரது மறைவு செய்தியை அவரது மகள் நேற்று இரவு இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தினார். பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். ...
பிரான்ஸ் அணியின் முன்னாள் மிட்ஃபீல்டர் பிளேஸ் மாடுய்டி தொழில்முறை கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மாடுய்டி 2018 இல் பிரான்சுடன் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றார் மற்றும் இன்டர் மியாமியில் தனது கால்பந்து வாழ்க்கையின் கடைசி இரண்டு ஆண்டுகளை செலவிட்டார். ...
பிரான்ஸ் அணிக்கும் அர்ஜென்டினா அணிக்கும் இடையில் நடந்த இறுதிப் போட்டியில் முதலிலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அர்ஜென்டினா அணி 2 கோல்களை அடித்து வெற்றிக்கு மிகவும் அருகிலிருந்த வேளையில், யாருமே எதிர்பாராத விதமாக இறுதி நிமிடங்களில் அடுத்தது கோல்களை அடித்து தங்களை விட்டுச் சென்ற வெற்றியைத் திரும்பவும் தங்கள் பக்கம் தனிஒருவனாக போராடிக் கொண்டு வந்த வீரன் தான் பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே....
கத்தாரில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை பல சர்ச்சைகளின் மையமாக இருந்தாலும், இதுவரை விளையாடியதில் மிகவும் எதிர்பாராத உலகக் கோப்பையாக இது வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பிடிக்கும். ...
உலகக்கோப்பையில் புதிய விதமாகப் பல முன்னணி அணிகள் தோல்வியைத் தழுவி முதலிலேயே தொடரை விட்டு வெளியேறினார்கள். இந்த தொடரின் முடிவில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாகப் பங்களித்து தங்கள் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் பிபா 2022 தொடரில் விருதுகளைத் தட்டிச் சென்ற வீரர்கள் குறித்த விவரம்....